மின் கட்டணத்தில் மாற்றம்

நாளை(16.07) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின் கட்டணத்தை 22.5 வீதத்தால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று(15.07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ இதனை தெரிவித்தார்.

இந்த வருடத்தில் மின்சார கட்டண திருத்தத்திற்காக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை ஆய்வு செய்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வீடு, மத வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள், தொழிற்சாலைகள், பொது நோக்கங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் என அனைத்து நுகர்வோர் பிரிவினரின் மின் கட்டணம் நாளை முதல் குறைக்கப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபையின் பிரேரணையின் மூலம் மொத்த மின் கட்டணத்தை 10 வீதமாகக் குறைப்பதற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும், ஆணைக்குழு கட்டணங்களை 22.5 வீதமாகக் குறைக்க தீர்மானித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version