சிறையிலுள்ள கைதிகளை திறந்த வெளியில் சந்திப்பதற்கு அவர்களின் உறவினர்களுக்கு இன்று(16.07) சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
119வது சிறைச்சாலைகள் தினத்தை முன்னிட்டு, இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றைய(16.07) தினம் கைதிகளை பார்வையிட செல்பவர்கள் உணவு உள்ளிட்ட பொருட்களை கைதிகளுக்கு வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.