முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களுக்கமைய, பொதுக் கல்வியில் அழகியல் பாடங்கள் இன்றியமையாதவை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அழகியல் பாடங்கள் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகிய தவறான கருத்துக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப, இடைநிலை மற்றும் உயர்நிலை கல்வியில் அழகியல் பாடங்களை கற்க முடியும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
க.பொ.த சாதாரண தர(OL) மற்றும் க.பொ.த உயர்தரப்(AL) பரீட்சைகளில் அழகியல் பாடங்களுக்கான பரீட்சைகளுக்கு மாணவர்கள் தோற்ற முடியும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
உயர் கல்வியிலும் அழகியல் பாடங்களில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழகியல் பாடங்கள் தொடர்பில் ஊடகங்களில் வெளியிடப்படும் தவறான கருத்துக்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.