மன்னாரில் ஒரே நாளில் 4 வீடுகளில் கொள்ளை

மன்னாரில் தொடர்ச்சியாக கொள்ளைசம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் கடந்த 16 ஆம் திகதி
பெரியகமம் பகுதியில் ஒரே நாளில் உள்ள நான்கு வீடுகளில் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் கொள்ளை இடம்பெற்ற வீட்டிலிருந்த CCTV காணொளியை பார்வையிட்ட போது
ந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவர் சொந்த வீட்டுக்குள் நுழைவது போன்று வீட்டை உடைத்து. வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.

அதே நேரம் குறித்த நபர் அருகிலிருந்த மற்றுமொரு வீட்டிலும் தாலி உட்பட பல லட்சம் பெறுமதியான நகைகளைக் கொள்ளை யடித்துள்ளார்.

இவ்வாறு மன்னார் சாவற்கட்டு பகுதியில் நான்கு கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸாருக்கு அறிவித்ததன் பின்னர் பொலிஸார்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version