அலி சப்ரி ரஹீம் கைது

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் கைது செய்யப்பட்டார்.

கட்டடம் ஒன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதன்படி இன்று (20.07) அவர் கற்பிட்டி காவல்துறையில் சட்டத்தரணியுடன் சரணடைந்த
போது கைது செய்யப்பட்டதாகக் கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவரைக் கற்பிட்டி சுற்றுலா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version