இந்தியாவின் முந்திரா துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பொருட்கள் போக்குவரத்து கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் கோவாவில் இருந்து 102 கடல் மைல் தொலைவில் தென்மேற்கு திசையிலுள்ள இந்து சமுத்திரத்தில் கப்பல் தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.
தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்திய கரையோர பாதுகாப்பு படையினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக Dornier ரக விமானம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.