தேர்தலின் போது இலஞ்சம் வழங்கும் குற்றத்திற்கு அபராதம் அதிகரிப்பு 

தேர்தலின் போது  இலஞ்சம் வழங்கும் குற்றத்திற்காக விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டக்கோவையில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தின் ஊடாக இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம்  நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தேர்தலின் போது இலஞ்சம் வழங்கும் குற்றத்திற்காக விதிக்கப்படும் அபராதம் 200 ரூபாவில் இருந்து 750,000 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பின் போது அநாவசிய அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு விதிக்கப்பட்ட 500 ரூபா அபராதம் ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

தேர்தலொன்றில் ஆள்மாறாட்டம் செய்யும் குற்றத்திற்காக விதிக்கப்பட்ட 300 ரூபா அபராதம் ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது. 

தேர்தல் கணக்குகளை தவறவிடுவோருக்கு இதுவரை விதிக்கப்பட்ட 300 ரூபா அபராதம் ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version