லிட்ரோ எரிவாயுவுக்கு தட்டுப்பாடு? 

சில பிரதேசங்களில் சுமார் ஒரு வாரமாக லிட்ரோ எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாக பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும், ஆகவே குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

போக்குவரத்து பிரச்சனை காரணமாக சில பிரதேசங்களுக்கான எரிவாயு விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது குறித்த போக்குவரத்து பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version