கட்டுப்பணம் செலுத்திய சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

சஜித் பிரேமதாச சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை ஐவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version