ஐக்கிய மக்கள் சக்தி கண்டி மாவட்ட அமைப்பாளராக துரை மதியுகராஜா நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாய மாநாடு இன்று(04.08) ஞாயிற்றுக்கிழமை நுவரேலியா. ஹங்குராங்கெத்தையில் நடைபெற்றது.

இதன்போது, அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட துரை மதியுகராஜா கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளராக சஜித் பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

துரை மதியுகராஜா, மத்திய மாகாண சபையின் உப தவிசாளராக இரண்டு தடவைகளும், அவைத் தலைவராக பதவி வகித்துள்ளதுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தவிசாளராகவும், 25 வருடங்களுக்கு மேலாக கண்டி மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதான அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version