ஜனாதிபதி தேர்தல்: அனுரவுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டது   

ஜனாதிபதி தேர்தல்: அனுரவுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டது    

2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க சார்பில் இன்று(06.08) கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. 

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அனுரகுமார திஸாநாயக்க சார்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணத்தை செலுத்தினார். 

நாட்டைக் கட்டியெழுப்பும் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கும் வேலைத்திட்டத்துடன் கூடிய அரசியலை நடத்துவதே தமது கட்சியின் நோக்கமாகும் என  பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதன்போது தெரிவித்தார்.   

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேர்தலுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும், அவர்கள் நாட்டை அனுரவிற்கு கையளிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார். 

நேற்றைய(05.08) தினம் வரையில் 17 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 17ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.  

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version