சடலமாக மீட்கப்பட்ட ரயில்வே ஊழியர்

கொழும்பு – தெமட்டகொடை ரயில் நிலையத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் காணாமற் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ரயில் நிலையத்திற்கு அருகில் கிணறொன்றிலிருந்து அவரது சடலம் இன்று பிற்பகல் (06.08) மீட்கப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறையைச் சேர்ந்த 47 வயதுடைய அவர், நேற்று நள்ளிரவு முதல் காணாமற்போயிருந்தார்.

இது தொடர்பில் ரயில் முனையப் பணியாளர்கள் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில், இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

போதிய தேடுதல் பணிகள் முன்னெடுக்கவில்லையென தெரிவித்து தெமட்டகொடை ரயில் பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version