
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய ஆதரவை மீளப்பெறுவதாக இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(13.08) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து, ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.