மன்னாரில் கைப்பற்றப்பட்ட 156 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருள்

மன்னாரில் 156 கிலோ கிராமிற்கும் அதிக கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கேரள கஞ்சா யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் நேற்று (13.08) கைப்பற்றப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்
பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 44 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவின் பெறுமதி சுமார் 42 மில்லியன் ரூபா என பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version