தேர்தல் பணிகளுக்காக 02 லட்சத்திற்கும் அதிகமான அரச ஊழியர்கள்

தேர்தல் பணிகளுக்காக 02 லட்சத்திற்கும் அதிகமான அரச ஊழியர்கள்

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பணிகளுக்காக 200,000 முதல் 225,000 வரையிலான அரச ஊழியர்கள் பணிக்கமர்த்தப்படுவார்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 13,000 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறும் என ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனைத்து வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version