ஜே.வி.ஆட்சியில் நாடு அழிவுப்பாதைக்கு செல்லும்-மரிக்கார்

இம்மாதம் 29 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாரளுமன்ற உறுப்பினர் SM மரிக்கார் நேற்று(26.08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் அதில் ஜனாதிபதி முறை இல்லாதொழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “இது தொடர்பில் உங்கள் கருது என்ன?” என வி மீடியா பணிப்பாளர் விமல் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது இதனை தெரிவித்தார். “அவர்களது குறித்த நிகழ்வு எதிர்வரும் மூன்றாம் திகதியே நடைபெறவிருந்தது. ஆனால் எமது நிகழ்வு 29 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் முந்திக்கொண்டு நடத்தியுள்ளனர். அவரசப்படாமல் பொறுமையுடன் இருங்கள். எமது வெளியீட்டில் சகல விடயங்களும் வெளியே வரும்” என மரிக்கார் பதிலளித்தார். அத்தோடு ஐக்கிய மக்கள் சக்தி கடந்த இரண்டு வருடங்களாக கூறி வரும் விடயங்களேயே ஏனைய காட்சிகள் தற்போது சொல்கின்றன எனவும் கூறினார்.

ஊடக சந்திப்பில் மரிக்கார் வெளியிட்ட மேலதிக விபரங்கள்

மேலும், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கி நாட்டின் பொருளாதாரம் மீட்கப்படும் என ஜே.வி.பி.யின் சுனில் ஹதுன்நேதி கூறுகிறார். பியோதரா ஆர்ப்பாட்டங்களை நடத்துவதன் மூலம் சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்படும் என ஜேவிபியின் லால்காந்த தெரிவித்துள்ளார். பிணையில்லாமல் கடன் வழங்கும் வங்கியை கட்டியெழுப்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த மாதிரி முட்டாள்தனமான கருத்துக்களை ஜனதா விடுதலை முன்னணி தெரிந்தே சொல்கிறதா? என மரிக்கார் கேள்வி எழுப்பினார்.

மேலும், 76 ஆண்டுகால அரசாங்க ஆட்சியில் நாட்டுக்கு எதுவும் நடக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியினர் கூறுகின்றனர். 1996 ஆம் ஆண்டு உருவான சந்திரிகாவின் அரசாங்கத்தில் விவசாய அமைச்சராக அனுர திஸாநாயக்கவும், கிராமிய பொருளாதார அமைச்சராக லால்காந்தவும், கலாசார அமைச்சராக விஜித ஹேரத் மற்றும் மீன்பிடி அமைச்சராக சந்திரிகா விஜேசிங்கவும் பதவி வகித்தனர். ஆனால் கடைசியில் நாட்டின் விவசாயத்துக்கும் நாட்டு மக்களுக்கும் எதுவும் செய்யவில்லை. இறுதியாக, ஒன்றரை வருடங்கள் கழித்து, அவர்கள் அமைச்சரவையை விட்டு ஓடிவிட்டனர்.

மேலும், விமல் வீரவன்சவும் ராஜபக்சவும் தேசபக்தி போர்வையில் மறைந்திருந்தனர். இன்று நந்தா மாலினியா என்ற போர்வையில் ஜே.வி.பி தமது தவறுகளை மறைக்க முயல்கிறது. மக்கள் விடுதலை முன்னணி நந்த மலானியாவை விற்றுத் தின்ன முயல்கிறது. நந்தமலானியை அவமரியாதை செய்ய வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணியை கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன், காலி முகத்திடல் போராட்டத்தின் போது ஜே.வி.பிக்கு 5 மணித்தியாலங்கள் அதிகாரபூர்வமற்ற முறையில் நாட்டில் அதிகாரம் கிடைத்தது. அப்போது பாராளுமன்றத்தை அழிக்க ஜே.வி.பி. அவர்களால், இலங்கையில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டன, ஒரு பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டார், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கொல்லப்பட்டார். மக்கள் விடுதலை முன்னணி 5 மணி நேரம் அதிகாரம் பெற்று இவ்வளவு அழிவை ஏற்படுத்தியிருந்தால், 5 ஆண்டுகள் ஆட்சியைப் பெற்றால் என்ன மாதிரியான நிலை ஏற்படும்?

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version