தேர்தல் நடவடிக்கைகளை உற்றுநோக்கும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணியகம்

தேர்தல் நடவடிக்கைகளை உற்றுநோக்கும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணியகம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணியகம் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக
ஒன்பது மாகாணங்களிலும் 26 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தியுள்ளது.

அவர்கள் அனைத்து மாகாணங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என தலைமை
கண்காணிப்பாளரும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினருமான நாச்சோ சான்செஸ் அமோர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (30.08) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கண்காணிப்பாளர்கள் எங்கள் கண்களாகவும் காதுகளாகவும் இருக்கப் போகிறார்கள்.
அவர்கள் தேர்தல் செயன்முறையை மிகவும் உன்னிப்பாக அவதானிப்பார்கள்.

ஜனாதிபதித் தேர்தலின் சட்ட நடைமுறை, நிதி, சமூக ஊடகங்கள் மற்றும் பாதுகாப்பு
ஆகியவற்கை உள்ளடக்கிய 10 நிபுணர்களைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகத்தை, நகரங்களில் மட்டுமல்லாது
சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் கண்காணிப்பாளர்கள் சந்திப்பார்கள்” என நாச்சோ சான்செஸ் அமோர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version