
இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து புதுக்கோட்டையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டனர்.
நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய கூறினார்.
இதன்போது அவர்கள் பயணித்த 03 படகுகளும் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் தாம் எதிர்கொள்ளும் மோசமான நிலையைக் கண்டு மாநில மற்றும் மத்திய அரசுகள் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாக புதுக்கோட்டை,
கே.ஆர்.ஜெகதாப்பட்டினம் மீனவர் தலைவர் தெரிவித்துள்ளார்.