மனைவியை பிரிந்ததாக ஜெயம் ரவி அறிவிப்பு

மனைவியை பிரிந்ததாக ஜெயம் ரவி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் ஜெயம் ரவி, அவரது மனைவி ஆர்த்தியை பிரிவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த செய்தி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஆழ்ந்து யோசித்த பின்னர் மனைவி ஆர்த்தியை பிரிய முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது எக்ஸ் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம். ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது.

என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும். திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன்.

எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

நீண்டகால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன்.

இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்திற் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.

இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த முடிவு எனது சொந்த முடிவாகும் இந்த விடயம் என்னுடைய தனிப்பட்ட விடயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன் என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே.

நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன்.

எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி” என ஜெயம் ரவி தனது அறிக்கையில் விரிவான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version