கடவுச்சீட்டு பிரச்சினை: போலாந்து சென்றுள்ள திணைக்கள அதிகாரிகள்

கடவுச்சீட்டு பிரச்சினை: போலாந்து சென்றுள்ள திணைக்கள அதிகாரிகள்

இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை அச்சிடுவது தொடர்பில் ஆய்வு செய்வதற்கு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் போலாந்து நாட்டிலுள்ள தொழிற்சாலைக்கு விஜயம் செய்துள்ளனர்.

இலத்திரனியல் கடவுச்சீட்டு ஒப்பந்தம் தொடர்பில் சர்ச்சைகள் நிலவி வருவதுடன், கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்படாமல் அதிகரித்து வரும் நிலையில் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய இரு அதிகாரிகள், இலத்திரனியல் கடவுச்சீட்டு தயாரிப்பு தொடர்பில் ஆய்வு செய்வதற்கு போலாந்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பில் நிலவும் சர்ச்சையுடன், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வெளியில் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்குப் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் அக்டோபர் மாத இறுதியில் கடவுச்சீட்டுகளின் முதற் தொகுதி கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இதன் காரணமாகக் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்கான வரிசைகளைக் குறைக்க முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.    

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version