பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்த வவுனியா டிப்போ ஊழியர்கள்

பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்த வவுனியா டிப்போ ஊழியர்கள்

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா டிப்போ ஊழியர்கள் இன்று(12.09) காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா டிப்போ ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா புதிய பஸ் நிலையத்தில் கடமையிலிருந்த பஸ் நடத்துனர் மற்றும் ஊழியர்கள் மீது கொழும்பு நோக்கிப் பயணிக்கும் தனியார் பஸ் ஊழியர்கள் தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த பஸ் ஊழியர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாக்குதல் மேற்கொண்டவர்களைக் கைது செய்யுமாறு கோரியே வவுனியா டிப்போ ஊழியர்கள் இன்று(12.09) காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version