தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று(15) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர், பரீட்சைகள் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இம்முறை 2,849 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு 323,841 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தனர்.
பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் 40 நாட்களுக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.