இலங்கை மக்கள் தெரிவு செய்யும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் X தளத்தில் வெளியிட்ட பதிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவது இலங்கையின் ஜனநாயகத்திற்காக ஆற்றப்பட வேண்டிய முக்கிய கடமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.