தமிழ் பொது வேட்பாளரின் மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டம்

தமிழ் பொது வேட்பாளரின் மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டம்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினை இரண்டாக பிளவுபடுத்தியதற்காக விடுதலைப் புலிகளினால் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய தண்டனை தான் 2005 ஆம் ஆண்டு தேர்தலை பகிஸ்கரிக்கச் செய்தது என்பதை அனைவரும் உணர வேண்டும் என தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டம் மட்டக்களப்பு கல்லடி மீனிசை பூங்காவில் நேற்று (17.09) மாலை நடைபெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் ஆகியோரும் கலந்துக்‌கொண்டனர்

பல்வேறு பகுதிகளலிருந்து வருகைத் தந்த ஆயிரக்கணக்கானோர் பிரச்சாரக் கூட்டத்தில் பங்குபற்றினர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version