தனியார் துறையினரின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் – சஜித் உறுதி

தனியார் துறையினரின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் - சஜித் உறுதி

தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 25,000 ரூபாவாக வேண்டும் என சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 67 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (17.09)
முன்னெடுக்கப்பட்ட போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச,

” கடவத்தையிலிருந்து மீரிகம வரையான அதிவேக வீதியின் மீதமுள்ள பகுதியை நிர்மாணிப்போம்.

அனைத்து பாடசாலைகளையும் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக மாற்றுவதோடு இலவச கல்வியையும் இலவச சுகாதார சேவையும் பாதுகாப்போம்.

புதிய தொழிற்துறைகளுக்கு முதலிடம் கொடுத்து ஒரு மில்லியன் தொழில் முனைவோர்களை உருவாக்குவோம்.

இல்லத்தரசிகளை மையமாகக் கொண்ட சுயதொழில் புரட்சி ஒன்றை ஏற்படுத்துவோம். நீதியையும் நியாத்தையும் நிலை நாட்டுவதோடு சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்போம்.

நாட்டை வங்குரத்தடையச் செய்த திருடர்களை நீதிமன்றங்களிடமும் மக்களிடமும் பொறுப்புக் கூறுகின்ற நிலைக்கு கொண்டு வருவோம்.

திருடர்கள் திருடிய வளங்களை பெற்று மீண்டும் இந்த நாட்டில் முதலீடு செய்வோம்.

சிலர் பைல்களை காட்டி திருடர்களை பிடிப்போம் என்று கூறினாலும், ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் சங்கமும் ஊழல் எதிர்ப்பு குழுவும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து, நாட்டை வங்கிரோத்தடையை செய்தது ராஜபக்சர்கள் தான் என்பதை நான்கின் ஒரு தீர்ப்பின் ஊடாக வெளிப்படுத்தினோம்.

இன்று ரணில் விக்கிரமசிங்கவினதும் அநுரகுமார திசாநாயகவினதும் அரசியல் டீல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த மோசமான அரசியல் கொடுக்கல் வாங்கல்களை தோல்வியடையச் செய்வதற்கு தொலைபேசிக்கு வாக்களித்து ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றியடைய செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இந்த வறுமையை போக்குவதற்கான புதிய வேலைத்திட்டமாக 24 மாதங்களுக்கு ஐந்து முறைகளின் கீழ் மாதம் ஒன்றுக்கு இருபதாயிரம் ரூபாய் வீதம் வழங்கி வறுமையை ஒழிப்போம்.

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பும் வெற்றி பெற்ற பின்னர் வினயமாகவும் பணிவாகவும் வெற்றி கொண்டாட்டங்களை முன்னெடுத்து ஆட்சி அதிகாரத்துடனும் பொறுப்புடனும் மக்களின் துன்பங்களை நீக்குகின்ற பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version