மன்னார்: வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு 

மன்னார்: வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு 

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை(21.09) காலை ஆரம்பமாகவுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்திய நிலையமாகச் செயற்பட்டு வரும் மன்னார் மாவட்டச் செயலகத்திலிருந்து வாக்குப்பெட்டிகள் அனைத்தும் மன்னார் மாவட்டத்தின் 98 வாக்களிப்பு நிலையங்களுக்கு பொலிஸாரின் பாதுகாப்புடன் பேருந்துகளின் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 90,607 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version