காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகி முதல் மூன்று மணித்தியாலங்களில் 35 தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் கண்காணிப்பாளர்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகள் மற்றும் வாக்காளர்களிடம் செல்வாக்கு செலுத்துதல் போன்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது.
பதிவாகிய சம்பவங்களுள் 25 முறைப்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒரு தாக்குதல் சம்பவமும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.