லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

நாளை (27.09) முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக, அவர் வழங்கியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை போதுமான அளவு எரிவாயு கையிருப்பில் உள்ளதாகவும் முதித பீரஸ் தெரிவித்துள்ளார்.

இவர், கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் திகதி லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இதற்கு முன்னர் குறித்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராகவும் அவர் பணியாற்றியிருந்தார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version