
நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சுயாதீனக் குழுவொன்று கட்டுப்பணத்தை இன்று சனிக்கிழமை செலுத்தியுள்ளது.
இந்த வருட பொதுத் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திள முதலாவது குழு இதுவென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் மற்றும் பிரதி ஆணையாளர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் செலவு குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படும் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபா செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.