சாதாரணதர பரீட்சை – மீள் திருத்தத்திற்கான விண்ணம் கோரல்

சாதாரணதர பரீட்சை - மீள் திருத்தத்திற்கான விண்ணம் கோரல்

சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வௌியாகின.

தற்போது வௌியாகியுள்ள பெறுபேறுகள் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற விரும்பினால் 1911 அல்லது 011 2 785 922, 0112 786 616, 011 2 784 208 அல்லது 011 2 784 537 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடைபெற்ற சாதாரணதரப் பரீட்சையில் 452,979 பரீட்சார்த்திகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version