வாக்குக்காக மக்களை தேடி வரும் போது என்ன செய்தீர்கள் என்று கேளுங்கள் – அங்கஜன்

வாக்குக்காக மக்களை தேடி வரும் போது என்ன செய்தீர்கள் என்று கேளுங்கள் - அங்கஜன்

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் உள்ள ஏனைய வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்குக்காக மக்களை தேடி வரும் போது அவர்களிடமும் கடந்த 05 வருடம் என்ன செய்தீர்கள் என்ற அறிக்கையைக் கேளுங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி தொகுதியில் நேற்று (19.10) இடம்பெற்ற மக்கள் சந்திபின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“என்னுடைய நான்கு வருட பெறுபேற்று அறிக்கையை(report) மக்களிடம் காண்பிப்பேன். அதேபோல் கடந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் உங்களை நோக்கி வரும் போது அவர்களிடமும் அந்த அறிக்கையை கேளுங்கள்.

ஒரு மாணவனுடைய அடைவு மட்டம் பரீட்சையின் பின்னரான அறிக்கை ஊடாகவே வெளிப்படும். அதேபோல் நான் கடந்த நான்கு வருடங்கள் மேற்கொண்ட அபிவிருத்திகளை அறிக்கை ஊடாக சகல மக்களுக்கும் காண்பிப்பேன்” என்றார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version