வடக்குப் பாதையில் ரயில் சேவை மீள ஆரம்பம்

வடக்குப் பாதையில் ரயில் சேவை மீள ஆரம்பம்

வடக்குப் பாதையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் யாழ்தேவி ரயில் இயக்கப்படும் என ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு பாதையில் திருத்தப் பணிகள் காரணமாக தற்போது மஹவ வரை மாத்திரமே ரயில் இயக்கப்படுகிறது.

இந்தியக் கடன் உதவியுடன் மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும் வகையில் வடக்கு ரயில்வே பாதை அமையப்பெற்றுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version