உத்தியோகப்பூர்வ வாகன பாவனை குறித்து மஹிந்த வெளியிட்ட தகவல்

உத்தியோகப்பூர்வ வாகன பாவனை குறித்து மஹிந்த வெளியிட்ட தகவல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவனை மற்றும் பாதுகாப்புக்காக
தற்போது ஆறு வாகனங்கள் மாத்திரமே பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம் வழங்கிய பணிப்புரைக்கமைய, ஆறு வாகனங்களில் அம்பியூலன்ஸ் வண்டி உட்பட
03 வாகனங்களை நாளைய தினம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை ஜனாதிபதி செயலகத்துக்கு
அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச 16 வாகனங்களில் 08 வாகனங்களை மாத்திரமே கையளித்துள்ளதாக,
அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (19.10) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version