நுவரெலியாவில் போதைப்பொருள் களியாட்டம்: 30 பேர் கைது

நுவரெலியாவில் போதைப்பொருள் களியாட்டம்: 30 பேர் கைது

நுவரெலியா உல்லாச விடுதியொன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த 30 பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, நேற்று(19.10) மாலை நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கஞ்சா, ஐஸ், குஷ் ரக போதைப் பொருட்கள், போதை மாத்திரைகள் மற்றும் சட்டவிரோத சிகரெட்டுக்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 38 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் அனைவரும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களை இன்று(20.10) நுவரெலியா நீதவான் முன்னிலையில் அஜார்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version