முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சுட்டுக்கொலை?

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சுட்டுக்கொலை?

துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின்
பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கட்டுகஸ்தோட்டையில் ரத்வத்தவுக்கு சொந்தமான அலுவலகத்தின் அருகில் உள்ள வீடொன்றில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான அவர்
காயமடைந்த நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று (20.10) உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது பற்றி விசாரணைகள்
இடம்பெற்று வருகின்றன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version