கட்டிடத்திலிருந்து தவறி வீழ்ந்த பல்கலைக்கழக மாணவன் பலி

கட்டிடத்திலிருந்து தவறி வீழ்ந்த பல்கலைக்கழக மாணவன் பலி

களனி பல்கலைக்கழக விடுதியொன்றில் உள்ள கட்டிடத்திலிருந்து தவறி வீழ்ந்து மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தேகம, ரிதிமாலியத்த பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவன் களனி பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் 4ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply