ஈரானிய பிரஜைகள் 10 பேருக்கு இலங்கையில் ஆயுள்தண்டனை

ஈரானிய பிரஜைகள் 10 பேருக்கு இலங்கையில் ஆயுள்தண்டனை

ஈரானிய பிரஜைகள் 10 பேருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று(23.10) ஆயுள்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காலியை அண்மித்த கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 17 பேரில் 10 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏனைய 7 பேர் மீதும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காலியை அண்மித்த கடற்பரப்பில் விபத்திற்குள்ளான படகை சோதனைக்குப்படுத்திய போது போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்பட்ட 146 கிலோ கிராம் பொருட்கள் அடங்கிய பொதியுடன் சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் குறித்த பொதியில் 48 கிலோ கிராம் ஹெரோயின் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

Social Share

Leave a Reply