இலங்கையில் ஆப்பிரிக்கப் பன்றிக்காய்ச்சல்

இலங்கையில் ஆப்பிரிக்கப் பன்றிக்காய்ச்சல்

மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பன்றிகளுக்குப் பதிவாகியிருந்த நோய் நிலைமை ஆப்பிரிக்கப் பன்றிக்காய்ச்சல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய மாதிரிகளை ஆய்வு செய்ததில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இந்நோய் பதிவாகியிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

கடந்த காலங்களில் கம்பஹா மாவட்டத்தின் பல பிரதேசங்களில் பன்றிகள் திடீரென இறக்கும் சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் விசேட பரிசோதனைகளை நடத்தியிருந்தது.

இந்த அதிதீவிர நோய் நிலைமை ஏனைய பகுதிகளுக்குப் பரவாமல் தடுப்பதற்காகக் குறித்த பகுதிகளிலுள்ள கால்நடை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version