இந்திய மீனவர்கள் 23 பேர் கைது

இந்திய மீனவர்கள் 23 பேர் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில் இன்று அதிகாலை (10.11) முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின்போதே
அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 03 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version