சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வு இல்லையெனில் போராட்டம் தொடரும்

சம்பள பிரைச்சினைக்கு உரிய தீர்வினை அரசாங்கம் வழங்காவிட்டால் அதிபர், ஆசிரியர் சங்க போராட்டம் தொடருமென அதிபர், ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசெப் ஸ்டாப்லின் தெரிவித்துள்ளார். தங்களது கோரிக்கைகள் பூர்த்திசெய்யப்படவில்லையெனவும், 5000 ரூபா கொடுப்பனவை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அண்மையில் சம்பள பிரச்சினை தொடர்பான ஆராயும் அமைச்சரவை உப குழு கட்டம், கட்டமான சம்பள உயர்வுக்கு அமைச்சரவைக்கு பரிந்துரை செய்திருந்தது.
இம்மாத சம்பளத்துடன் 5000/- கொடுப்பனவு வழங்கப்படுமெனவும், நிதி நெருக்கடி காரணமாக 2022 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தினூடாக மூன்று கட்டங்களாக சம்பள உயர்வு வழங்கப்படவுளது என அமைச்சரவை இணை பேச்சாளர், பெருந்தோட்ட துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்றைய தினம் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்தே அதிபர், ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசெப் ஸ்டாப்லின் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வு இல்லையெனில் போராட்டம் தொடரும்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version