மாலைத்தீவில் இலங்கையர்கள் ஐவர் கைது

மாலைத்தீவில் இலங்கையர்கள் ஐவர் கைது

இலங்கையிலிருந்து மாலைத்தீவுக்கு ஏற்றிச்செல்லப்பட்ட 344 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 124 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருட்களுடன் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருட்களை ஏற்றிச்சென்ற இலங்கை இழுவை மீன்பிடி
படகொன்று மாலைத்தீவு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது .

இலங்கை கடற்படையினர் வழங்கிய இரகசிய தவலுக்கமைய சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைதுசெய்யப்பட்டவர்கள் 21 வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்டவர்களெனவும் திருகோணமலை மற்றும் தெய்வேந்திரமுனை பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த போதைப்பொருட்கள் மாலைதீவுக்கு விற்பனைக்காக கொண்டுசெல்லப்பட்டதா அல்லது மாலைத்தீவிலிருந்து வேறு நாடுகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version