இலங்கை அணியில் யாழ் தமிழர்கள்

இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 வீராங்கனைகள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மகாஜனக் கல்லூரி வீராங்கனைகளான சி.தர்மிகா, உ.யோகிதா, கிரிசாந்தினி, ம.வலன்ரீனா ஆகிய நான்கு மாணவிகள், 23 பேரடங்கிய குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

19 வயதுக்குட்பட்ட மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட போட்டி தொடர் பங்களாதேஷில், இம்மாதம் 11 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த அணி நாளை (08.12) பங்களாதேஷ் நோக்கி பயணமாகவுள்ளது.

மகாஜன கல்லூரியின் பெண்கள் உதைபந்தாட்ட அணியின் பொறுப்பாசிரியரை செல்வி பத்மநிதி செல்லையா பங்களாதேஷ் பயணமாகவுள்ள அணியின் பொறுப்பாசிரியையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version