மக்கள் சார் அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட வேண்டும் – சஜித்

மக்கள் சார் அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட வேண்டும் - சஜித்

புதிய அரசியல் கலாசாரத்துக்காக அர்ப்பணிப்போடு செயற்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புது வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் இன்று செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதில், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கேந்திர ஸ்தானமாக, உயரிய நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு தனித்துவமானதொன்றாகும்.

வெறும் கோஷங்களுக்கு சுருங்கிப் போகாது, புதிய அரசியல் கலாசாரத்தின் ஊடாக மக்களின் எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் நிறைவேற்றப்படும், மக்கள் சார் அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க நாடாளுமன்றத்திலுள்ள அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் ” என்றார்.

மேலும் அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடியவருடமாக அமைய , சபாநாயகர் தலைமையிலான அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், செயலாளர் நாயகம் தலைமையிலான அனைத்து பாராளுமன்ற ஊழியர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது வாழ்த்து தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version