உயிரிழந்த முப்படை தளபதிக்கு இன்று (09/12) வெலிங்டன் மைதானத்தில் இராணுவ மரியாதை செலுத்தப்படவுள்ளது.
இதில் தமிழக முதலமைச்சர் மு.கா ஸ்டாலின் உட்பட இராணுவ, விமான படை தளபதிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கலந்து கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் சடலங்கள் இன்று டெல்லி கொண்டு செல்லவுள்ளதாகவும் நாளை (10/12) இறுதி சடங்குகள் இடம்பெறும் என்றும் அறியப்படுகிறது.
