பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் பலத்த மழை காரணமாக பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (19) காலை 08.00 மணி முதல் நாளை காலை 08.00 மணி வரை அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை மாவட்டத்தின் பதுளை, பசறை, ஹாலிஎல பிரதேசங்களுக்கும், கண்டி மாவட்டத்தின் மெததும்பர, பாத்ததும்பர, தோலுவ பிரதேசங்களுக்கும், லக்கல பல்லேகம, அம்பங்கங்க கோரலய, பல்லேபொல, மாத்தளை, நாவுல ஆகிய பிரதேசங்களுக்கும், குருநாகம மாவட்டத்தின் ரிதிகம பிரதேச செயலர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, மாத்தளை மாவட்டத்தின் யட்டவத்த, உக்குவளை, ரத்தோட்டை மற்றும் வில்கமுவ ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version