கட்டுப்பணங்களை மீள செலுத்தல் குறித்து ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

கட்டுப்பணங்களை மீள செலுத்தல் குறித்து ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

2023 ஆம் ஆண்டில் நடத்தப்படவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியவர்களுக்கு அந்த பணத்தை மீண்டும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கட்டுப்பணத்தை வைப்பு செய்தமைக்காக வழங்கப்பட்ட பற்றுச்சீட்டுக்கள் சமர்ப்பிக்கப்படுமாயின், அவர்களுக்கு அப்பணம் மீளளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணத்தை வைப்புச் செய்த பற்றுச் சீட்டின் மூலப்பிரதி,வைப்புப் பணம் மீளளிப்புச் செய்வதற்கான விண்ணப்பக் கடிதம் ஆகியவற்றை கட்டுப்பணத்தை வைப்புச் செய்துள்ள குறித்த மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version