முன்னாள் முதலமைச்சருக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் மற்றும் அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளரான சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதிவாதிகளுக்கு தலா இரண்டு லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றங்களை விசாரிப்பதற்பான ஆணைக்குழுவால் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சட்டவிரோதமாக எரிபொருள் கொடுப்பனவாக 2.68 மில்லியன் ரூபாவை பெற்றுக் கொண்டதன் ஊடாக ஊழல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version