2024 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் ஆறுக்கான விண்ணப்பங்களை இணையத்தினூடாக சமர்ப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களை இன்று (09.04) முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை http://g6application.moe.gov.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதனூடாக சமர்ப்பிக்க முடியும்.
அதிகபட்சமாக 3 பாடசாலைகளுக்கு மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான வழிமுறைகளை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.moe.gov.lk இல் பெறலாம்.