வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (09.04) காலை முன்னிலையான முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.