தேவாலயம் மீது துப்பாக்கி சூடு நடாத்தியவர் கைது

பொலனறுவ, மன்னம்பிட்டி பகுதியில் “வாழும் கிறிஸ்துவ தேவாலயம்” மீது ஒருவர் நேற்று(18.04) இரவு 7 மணியளவில் துப்பாக்கி சூடு நடாத்திவிட்டு தப்பி சென்றுள்ளார். விசாரணைகளின் போது பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தேவாலயத்தின் வாயில் பகுதில் வந்து நோட்டமிட்டு பின்னர் பின்னோக்கி சென்று வீதியிலிருந்து துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளார். ஆனால் இந்த துப்பாக்கி சூட்டில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மன்னம்பிட்டிய பகுதியை சேர்ந்த 38 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த தேவாலயத்தின் போதகருக்கும், துப்பாக்கி சூடு நடத்தியவருக்குமான தனிப்பட்ட பகையே துப்பாக்கி சூட்டுக்கு காரணமென தெரியவந்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version